​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Published : Sep 22, 2024 7:28 PM

"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Sep 22, 2024 7:28 PM

இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புவதாக கூறினார்.

எனினும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போது எப்படி அந்நாட்டுடன் நல்லுறவை பேண முடியும் என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.

மேலும், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தற்போது குறைந்துள்ளதாகவும், பயங்கரவாதம் இங்கு முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.